Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகனின் பிறந்த நாள்! கவுரவம் பார்த்தாஜெயிக்க முடியாது!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தண்ணி மேலே சத்தியமா... உன்னை கைவிடமாட்டேன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2014
04:06

திருமணச் சடங்கில் அக்னியைச் சாட்சியாக வைத்து மணமக்கள் வலம் வருவது இந்தக்கால வழக்கம். குறிஞ்சிப் பாட்டு என்ற இலக்கிய நுõலில், முருகப்பெருமான் முன்னிலையில், தண்ணீரை சாட்சியாக வைத்து மணமக்கள் வாழத் தொடங்குவது  பற்றிய குறிப்பு உள்ளது.ஒரு பெண் தான் நேசித்த ஆண் மீது, இவன்  நம்மைக் கடைசி வரை கைவிடாமல் இருப்பானா என்ற சந்தேகம் கொண்டாள். மனம் உருகி முருகப்பெருமானை வழிபட்டாள். இதை அறிந்த அவளது காதலன், உன்னை என்றும் பிரிய மாட்டேன். பிரிந்தால் தர்மம் தவறிய செயல் செய்தவனாகி விடுவேன் என்றான். அத்துடன், தங்கள் குறிஞ்சி நிலக்கடவுளான முருகனை சாட்சியாக வைத்து, மலையில் இருந்த சுனை நீரைக் கையில் எடுத்து குடித்தான். சத்தியம் தவறினால், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விடும் என்ற நம்பிக்கையில் இப்படி செய்திருக்கிறார்கள். இப்போது சத்தியமும் இல்லை.. குடிநீரும் இல்லை...பாட்டிலுக்குள் போய்விட்டது விலைக்கு விற்குமளவு!

ஓம் என்னும் பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்வது மயில். இதன் பார்வை பட்ட இடத்தில் நன்மை உண்டாகும் என்பதை,துங்க அனுகூல பார்வைத் தீர செம்பொன் மயில் என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். முருகனின் வேலையும், மயிலையும் முன்னிறுத்தி வேலும் மயிலும் துணை என்று சொல்வோருக்கு மரணபயம் இருக்காது என்பது ஆன்றோர் வாக்கு. குறிப்பாக, ஒரே சமயத்தில் பல விஷயத்தில் கவனம் வைக்கும்  அஷ்டாவதானிகள், தசாவதானிகள் போன்றோர், தங்கள் அறிவு தடைபடாமல் இருக்க இந்த மந்திரத்தை ஜெபிப்பர் என வாரியார் கூறுகிறார். இதனையே ஆறெழுத்தாக வேலுமயிலும் என்றும் ஜெபிப்பதுண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar