திருவெண்ணெய்நல்லூர் பையூரில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2014 01:06
திருவெண்ணெய்நல்லூர் அருகே தட்சணாமூர்த்தி கோவிலில் நேற்றுகுருபெயர்ச்சி சிறப்புபூஜைகள் நடந்தன.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பையூர் கிராமத்தில் 12 அடி உயரத்தில்ஞானகுரு தட்சணாமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மிதுனராசியிலிருந்து கடகராசிக்கு குரு பகவான் பிரவேசிப்பதை முன்னிட்டுஇக்கோவிலில் நேற்றுகுரு பெயர்ச்சி சிறப்புபூஜைகள் நடந்தன.மதியம் 2:00 மணிக்குவிநாயகர் பூஜை மற்றும்மகாசங்கல்பமும், மதியம்2:45 மணிக்கு கலசபூஜையும், குரு பரிகாரஹோமங்களும் நடந்தன.மாலை 4:35 மணிக்குமகாபூர்ணாஹூதி, தீபாராதனையும், மாலை 4:45மணிக்கு மகா அபிஷேகம்மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தன. மாலை 5:15மணிக்கு குரு பகவானுக்கு கலச அபிஷேகமும், மாலை 5:58மணிக்கு மகாதீபாராதனையும் நடந்தது.பரிகாரம் செய்ய வேண்டிய கடகம், மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம்,தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் கட்டணம் செலுத்தி,அவர்களே 12 அடி உயரகுருபகவானுக்கு அபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை குருமூர்த்தி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.