கதிராமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சூரிய விநாயகர் அருள்பாலிக்கிறார். அதிகாலையில் சூரிய ஒளி அவர் மீது படுவதால் அவருக்கு இப்பெயராம். ஆந்திராவி<லுள்ள காளஹஸ்திக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோயிலில் வழிபட்டு அங்கு சென்று வந்த பலனைப் பெறலாம் என்கிறார்கள். தென் காளஹஸ்தி என்ற சிறப்புப் பெயரும் இத்தலத்துக்கு உண்டு.