Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உயிர்சக்திகளை ஊக்குவிக்கும் ... ஐந்து முக ருத்ராட்சம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ருத்ராட்ச மகிமை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2014
03:06

முன்னொரு காலத்தில் சார்வாங்கன் என்பவன் தன் கடமைகளை மறந்து, தான் செய்த வியாபாரத்தில் பல தவறுகள் புரிந்து, கூடா ஒழுக்கம் கொண்டு வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்து களவுத் தொழிலிலும் ஈடுபட்டான். இறுதியாக விந்திய மலைச் சாரலில் உயிர் துறந்தான். அவனை யம கிங்கரர்கள் பாசக் கயிற்றால் பற்றி இழுத்து யமலோகத்திற்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது, சிவகணங்கள் அவர்களைத் தடுத்தனர். இவ்வுயிரை கைலாயத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம் என்றனர். யமனின் துõதுவர்களோ, இவன் மகாபாபி என்றனர். அதற்கு சிவகணங்கள், இவன் வாழ்ந்த முறை ஒழுங்கீனமானதாக இருக்கலாம். ஆனால் இவன் இறந்த இடத்திலிருந்து பத்து முழ தொலைவில் ஒரு ருத்ராட்ச மரம் உள்ளது. அந்த மரத்தின் அதிர்வலைகள் இவனை புண்ணியவானாக்கிவிட்டது. எனவே, இவனுக்கு சிவலோகப் பதவி கிட்டியது! என்றனர். அப்படிப்பட்ட சிறப்பு, ருத்ராட்சத்திற்கு உண்டு. சிவனின் வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்ராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து வெண்ணிற ருத்ராட்சங்கள் பதினாறும், நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ண ருத்ராட்சங்கள் பத்தும் வெளிப்பட்டன.

ருத்ராட்சத்திற்கு தனி சிறப்புக்கள் உண்டு

இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.

தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது.

மருத்துவ குணங்கள் நிறைய உண்டு.

ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் அதைச் சுற்றி உண்டாகும் ஒளி சக்தி வட்டம் நம் உடலை துõய்மையாக்குகிறது. இந்த ஒளி வட்டம் அவரவர் உடல் நிலை மற்றும் மனநிலையைப் பொறுத்து அமையும்.

ருத்ராட்சத்தில் ஒன்று முதல் பல முகங்கள் உள்ளன. எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்க வல்லவை. ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. இது மலைப் பிரதேசங்களில் காய்க்கிறது. இது நேபாள நாட்டில் இயற்கையாகக் கிடைக்கிறது. சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராட்சம். சூரியன் எப்படி தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவாக்கியதோ அது போல ருத்ராட்சம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதையும் கட்டுப்பாட்டில் வைக்கும் சக்தி கொண்டது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar