விழுப்புரம்: விழுப்புரம் ரயிலடி விநாயகர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழுப்புரம் ரயிலடி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு மங்கள இசையும், 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, சுமங்கலி பூஜை, தன பூஜை, லட்சுமி ஹோமம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து மாலை முதல் கால யாகசாலை பூஜையும், அஷ்டபந்தனம் சார்த்துதலும் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 10:00 மணிக்கு விநாயகர், பாலசுப்ரமணியர், நாகதேவதை, ராஜகணபதி மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.