அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதை யொட்டி தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 13 நாட்கள் நடக்கும் விழாவில், நேற்று முன்தினம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். நேற்று மாலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரானது முக்கிய வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.