புதுச்சேரி: மூல நட்சத்திரத்தையொட்டி, பஞ்சவடீ ஆஞ்ஜநேய சுவாமிக்கு, நாளை (12ம் தேதி) பால் அபிஷேகம் நடக்கிறது. புதுச்சேரி – திண்டிவனம் நெடுஞ்சாலை பஞ்சவடீயில் உள்ள, ஆஞ்ஜநேயர் கோவிலில், மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று (11ம் தேதி), மாலை 4:30 மணிக்கு நடக்க இ ருந்த பால் அபிஷேகம், நாளை (12ம் தேதி) காலை 8:00 மணிக்கு நடக்க இருக்கிறது. இத்தகவலை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், நிர்வாக அதிகாரி சுந்தரவரதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.