பதிவு செய்த நாள்
12
ஜூலை
2014
12:07
பெங்களூரு: ராஜராஜேஸ்வரி நகர், ஸ்ருங்ககிரி சண்முகர் திருக்கோவிலில், வரும், 21ம் தேதி ஆடிக் கிருத்திகை விழா நடக்கிறது. அன்று, அதிகாலை 4:30 மணியிலிருந்து, 6:30 மணி வரை சிறப்பு அபிஷேகம்; காலை 7:00 மணியிலிருந்து, இரவு 9:30 மணி வரை, சுவாமிக்கு அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. பஞ்சாமிர்த அபிஷேகத்துக்கு 501 ரூபாயும், அலங்கார சேவைக்கு 5,000 ரூபாயும், தோமாலை சேவைக்கு 5,000 ரூபாயும், பிரசாத சேவைக்கு 1,000 ரூபாயும், அர்ச்சனைக்கு 100 ரூபாயும், காவடி சேவைக்கு 100 ரூபாயும் கட்டணம்.