Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மன் கோவில்களில் வரலட்சுமி பூஜை! ஆடி திருவிழாவில் தீர்த்தக்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2014
01:08

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த அவதானபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். விழாவின், முக்கிய நிகழ்வான பூங்கரகம் தலை கூடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த அவதானபட்டியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளது பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மாரியம்மன் திருவிழா ஏழு நாட்கள் நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த ஏழு நாட்களுக்கு முன் கொடியேற்றம், விநாயகர் பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாள் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதனை தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு பம்பை மேளம், கோலாட்டம் மற்றும் நாதஸ்வர இன்னிசை கச்சேரியும் நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்வான பெண்கள் மாவிளக்கு எடுக்கு நிகழ்ச்சி, நேற்று மதியம் நடந்தது. இதில், அவதானபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு, சிறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, மாவிளக்கு எடுத்து மேள,தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து, பூங்கரகம் தலை கூடும் நிகழ்ச்சி கோவிலுக்கு எதிரே நடந்தது. இதில், அவதானபட்டியை சேர்ந்த பூசாரி ஒருவரும், நெக்குந்தியை சேர்ந்த பூசாரி ஒருவரும் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை எடுத்து வந்து ஒன்றாக கூடினர். இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர். இதனையடுத்து, பக்தர்கள் நேர்த்தி கடனாக கோவிலில், ஆடுகளை பலியிட்டு சமைத்து, உறவினர்களுக்கு விருந்தளித்தனர். இதன்படி, நேற்று மதியம் மட்டும் கோவில் வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டது. கோவில் திருவிழாவையொட்டி, அவதானபட்டியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar