சாலிகிராமம் : ராகவேந்திரருக்கு, உத்திர ஆராதனை சிறப்பு வழிபாடு நடந்தது. சாலிகிராமம், ஸ்ரீ ராமர் தெரு, ராகவேந்திர சுவாமி கோவிலில், கடந்த 11ம் தேதி, ஆராதனை மகோத்சவ வழிபாடு துவங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வந்தன. நேற்று காலை ஹோம சேவை நடந்தது. மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, இரவில் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியுடன், சிறப்பு வழிபாட்டு விழா நிறைவு பெற்றது.