மயிலம்: மயிலம் கூட்டக்கார சுவாமி கோவிலில் நடந்த ஆவணி திருவிழாவில் பெண்கள் பொங்கலிட்டனர். மயிலம் கூட்டக்கார சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நடந்தது. காலை 8 மணிக்கு சுவாமிக்கு வழிபாடு, தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு பெண்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனர். பக்தர்கள் கோவில் வளாகத்தில் மண் குதிரைகளை விட்டனர். இரவு 8 மணிக்கு நடந்த மகா தீபாராதனையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.