குன்றக்குடியில் குவிந்த பக்தர்கள் ; நீண்ட நேரம் காத்துக்கிடந்து சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2026 12:02
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள், பாதயாத்திரையாகவும், காவடி பால்குடம் எடுத்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை சண்முகநாதப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காரைக்குடி தேவகோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், பால்குடம் எடுத்தும் சண்முகநாத பெருமானுக்கு செலுத்தினர். விடுமுறை நாளான நேற்று, சிவகங்கை, புதுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் குன்றக்குடிக்கு வந்தனர். வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் குவிந்ததால், கோயில் மலை அடிவாரம் வரை மக்கள் நீண்ட நேரம் காத்துக் கிடந்தனர். மாலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு, காரைக்குடி கண்டனூர் பள்ளத்தூர் புதுவயல் உட்பட பல்வேறு பகுதிகளிலும் உள்ள முருகன் கோயில்களின் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.