பதிவு செய்த நாள்
21
ஆக
2014
12:08
வாலாஜாபாத் : வல்லபாக்கத்தில் உள்ள பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் கட்டடத்தில், ஆலமரச் செடிகள் முளைத்து இருப்பதால், விரிசல் ஏற்பட்டு வருகிறது.வாலாஜாபாத் பேரூராட்சி வல்லபாக்கம் பகுதியில், சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கியில்,இக்கோவிலின் பெயரில், 1 லட்சம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, தினமும் ஒரு கால பூஜை நடந்து வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் கட்டடங்கள் பராமரிப்பு இன்றி காணப்படுவதால், கோவில் கட்டடம் மற்றும் கோபுரங்களின் மீது ஆல மரச்செடிகள் முளைத்து, விரிசல் ஏற்பட்டு வருகிறது.இதே நிலை நீடித்தால், கோவில் முழுவதும் இடியும் அபாயம் உள்ளது.எனவே, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், ஆல மர செடிகளை அகற்றி, கட்டடங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.