செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக்காப்பு அணிவிக்கப்பட்டது. இரவு, 11:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். ஒரு மணிநேரம் ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. அம்மன் பக்தி பாடல், தாலாட்டு பாடல் பாடப்பட்டது. சென்னை, புதுச்சேரி, வேலூர், ஈரோடு, சேலம் உட்பட பல பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.