பதிவு செய்த நாள்
12
செப்
2014
02:09
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே நடந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டி கிராமத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன், விநாயகர் கோவில் ராஜகோபுரம் புனரமைக்கும் பணி நடந்து, நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 7ம் தேதி, அதிகாலை, 4.30 மணியளவில், புதிய கோபுர கலசங்களுக்கு கணபதி ஹோமம், சுதர்ஷன ஹோமம் செய்து, அபிஷேகம் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை, 4.30 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம், நாடி சந்தானம், தத்வாச்சனை, ஸ்பர்சாஹுதி, நயநோன்மீனம் ஸ்வாமிக்கு கண் திறத்தல் நடந்தது. காலை, 7.30 மணியளவில், மகாபூர்ணாஹுதி, கடங்கள் புறப்பாடு மூலவர் மற்றும் உறசவ மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாரியம்மன், விநாயகர் ஸ்வாமிக்கு அபிஷேம், தீபாராதனை பூஜைகள் நடந்தது. விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.