Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை சோமநாதர் கோயில் சித்திரை ... சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் நகரத்தார் வழிபாடு: லட்சக்கணக்கானோர் குவிந்தனர் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2026
01:04

திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் நேற்று காலை 8.30மணி யளவில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்பு எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடி கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்ததை தொடர்ந்து சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம் நாதஸ்வர இன்னிசை முழங்க நடந்தது.  ஐயாறப்பர், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி படிச்சட்டத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு ஐயாறப்பர், அறம் வளர்த் தநாயகியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலை பிரச்சார மண்டபத்தில் அஞ்செழுத்தெ ஆகமம் என்ற தலைப்பில் ஐயாறப்பர் கோயில்  கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான்சுவாமி கள் சொற்பொழிவும். கலியமூர்த்தி சகோதாரர்களின் மங்கள இசை கச்சேரியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சித்திரை பெருவிழா வில் வரும் வரும் 25 ம் தேதி காலை பல்லக்கு மாலை 5.00 மணிக்கு தன்னைத்தான் பூஜித்தல் இரவு  9.00 மணிக்கு ஆறூர் சுவாமிகள் வருகை இறைவன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சந்நிதி முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜையும் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி வெள்ளி வாகனத்தில் எழுந்தருள சதுர்முகச்சப்பர வீதியுலா நடைபெறுகிறது. 29  ம்தேதி காலை 9.00 மணிக்கு மேல்  பஞ்சரததேரோட்டமும், மே 2 ம் தேதி சப்தஸ் தான விழாவில் காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியு டன் விசித்திர கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு ஏழூர் வலம் வருதல் நிகழ்ச்சியும், 3  ம்தேதி தில்லைஸ்தானம் உள்ளிட்ட 7 ஊர் பல்லக்குகள்  திருவையாறு வீதிகள் வலம் வந்து பொம்மை பூப்போடுதல் நிகழ்ச்சியும் பின்னர் 6 ஊர் பல்லக்குகளும் தீபா ராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இதற்கான ஏற்பாடு களை தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வழிகாட்டுதலின்படி ஐய்யாறப்பர் கோயில் கட்டளைவிசாரணைஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள்,  மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar