திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் மகோற்சவம் இன்று துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆதிநாயகனாக வீற்றிருக்கும் ருக்மிணி சத்யபாமா சமேத வேணுகோபாலனுக்கு 10 நாள் மகோற்சவ விழா இன்று துவங்குகிறது. காலை 6 மணிக்கு ருக்மிணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் முத்துபந்தல் விமானத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. மதியம் அலங்கார திருமஞ்சனம், சேவை சாற்று மறை, இரவு அம்ச வாகனத்தில் வானவேடிக்கையுடன் வீதியுலா நடக்கிறது. தினசரி காலை, மாலை சுவாமி வீதியுலா, மதியம் திருமஞ்சனம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 20ம் தேதி சுவாமி கருடசேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 22ம் தேதி மதியம் அலங்கார திருமஞ்சனம், வேணுகோபாலன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலை மையில் நடக்கும் விழாவில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.