Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரம் நடராஜர் கோவில் ... திருப்பரங்குன்றம் கட்டிக்குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெ.,விற்கு பார்சலில் செல்லும் சிவகங்கை கோவில் பிரசாதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2014
12:10

சிவகங்கை: சிவகங்கை சனீஸ்வரன் கோவில் பிரசாதம் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெ., விற்கு பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மஜித் ரோட்டில் சனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோவில் நிர்வாகத்திற்கு நேற்று காலை பெங்களூருவில் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில் பேசிய அமைச்சரின் உதவியாளர் ஒருவர், சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அதற்கான பிரசாதத்தை பார்சலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை உறுதி செய்த கோவில் நிர்வாகி பாபு பூஜைக்கான ஏற்பாடு செய்தார். இதன்படி பால், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், மஞ்சள் உட்பட 9 வகையான பூஜையை பூஜாரி செல்வராஜ் செய்தார். நகர அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாண்டி, வட்ட செயலர்கள் சரவணன் சேதுபதி, பாண்டிகுமார் உட்பட சிலர் பங்கேற்றனர். பூ, விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாதத்தை பெங்களூருக்கு அனுப்பி வைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.நிர்வாகி பாபு கூறுகையில், "விருதுநகர் மாவட்ட அமைச்சர் ஒருவரின் நேர்முக உதவியாளர் எனக் கூறி ஒருவர் நேற்று காலை 7 மணிக்கு எனது மொபைலில் பேசினார். உள்ளூர் கட்சி நிர்வாகிகளை வைத்து, சிறப்பு பூஜை நடத்தி, பெங்களூரு சிறையிலுள்ள ஜெ.,விற்கு வழங்கும் வகையில் பிரசாதம் அனுப்புமாறு கூறினார். நிர்வாகிகள் சிலரை பங்கேற்க செய்து சிறப்பு பூஜை செய்து பிரசாதம் அனுப்பியுள்ளோம்,” என்றார்.பூஜாரி செல்வராஜ் கூறும்போது, "சனிப்பெயர்ச்சி மார்கழியில் துவங்கும் நிலையில் ஆண்டின் இறுதியில் சிலரை சனி பகவான் துன்பப்படுத்தலாம். இது போன்ற பிரச்னை தீர இச்சிறப்பு பூஜை உதவியாக இருக்கும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar