Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குடியிருப்பு சங்கம் சார்பில் கருட ... ஜெ.,விற்கு பார்சலில் செல்லும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியல்கள் அகற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2014
12:10

சென்னை: செயல் அலுவலர் நியமனத்தை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் ஜன., 6ம் தேதி உத்தரவிட்டதை அடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில், அறநிலையத் துறையால் வைக்கப்பட்ட உண்டியல்கள், இன்று அகற்றப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் உள்ள, மிகப் பழமையான கோவில்களில் ஒன்றான, சிதம்பரம் நடராஜர் கோவிலை, 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக, தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர்.இவர்கள் நிர்வாகத்தில், முறைகேடு நடக்கிறது என்று கூறி, இக்கோவிலுக்கு அறநிலையத் துறை செயல் அலுவலரை நியமிக்க, 1987ல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, தீட்சிதர்கள் சார்பில், பல்வேறு கோர்ட்களில் தொடரப்பட்ட வழக்குகளின் முடிவாக, ஜன., 6ம் தேதி, சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில், செயல் அலுவலர் நியமனம் ரத்து செய்யப்பட்டதுடன், கோவில் நிர்வாக பணி குறித்த சில வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டன. தீட்சிதர்கள் மட்டுமல்லாது, நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள், இத்தீர்ப்பை வரவேற்றனர். இக்கோவிலுக்கு, அறநிலையத் துறை செயல் அலுவலர் நியமனம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, கோவில் நிர்வாகம் பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அரசாணை: சுப்ரீம் கோர்ட் உத்தரவை, செயல்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்படாததால், 2009 முதல், அறநிலையத் துறையால் இங்கு வைக்கப்பட்ட உண்டியல்கள், பிரசாத விற்பனையகங்கள் அகற்றப்படாமல் உள்ளன.இந்நிலையில், இதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணை, கடந்த 19ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த போது, செயல் அலுவலரால் வைக்கப்பட்ட உண்டியல்களை அகற்றுவது, ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த பிரசாத விற்பனையகங்களை அகற்றுவது, அறநிலையத் துறை வசம் இருந்த காலத்தில் நடந்த வரவு செலவு கணக்குகளை, பொது தீட்சிதர்களிடம் ஒப்படைப்பது, ஆகியவை பற்றி, அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இன்று ஒப்படைப்பு: அரசாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஐந்து இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களை, இன்று அகற்ற, அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. செப்., 30 வரை இந்த உண்டியல்களில் செலுத்தப்பட்ட காணிக்கை தொகையை எண்ணி, தீட்சிதர்களிடம் ஒப்படைக்கவும், ஏற்கனவே இதில் வசூலாகி வங்கியில் செலுத்தப்பட்ட தொகைகளையும், பிரசாத விற்பனையகங்கள் வாயிலாக வசூலான தொகையையும், புதன்கிழமை ஒப்படைக்க அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, அறநிலையத் துறை அதிகாரிகள், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று செல்கின்றனர். இதனால், இக்கோவில் தீட்சீதர்களின் முழுமையான நிர்வாகத்துக்கு வந்துவிடுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar