Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., வடபத்ரசாயி கோயிலில் புஷ்ப ... நாமஸ்மரன் 2014 இசை விழா! நாமஸ்மரன் 2014 இசை விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தையுடன் பெண் தீயில் பாய்ந்த 16ம் நூற்றாண்டு சதிக்கல் கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 அக்
2014
10:10

போடி: கி.பி., 16ம் நுாற்றாண்டில், தன் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு, தாய் ஒருவர், தீயில் பாய்ந்ததன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சதிக்கல், தேனி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போடி சி.பி.ஏ., கல்லுாரி வரலாற்றுத் துறை ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் சார்பில், முதல்வர் ராஜராஜன், பேராசிரியர்கள் ஞானசேகரன், மாணிக்கராஜ், கபேஷ், கனகராஜ் ஆகியோர், சின்னமனுார் அருகே காமாட்சிபுரம் ஓடைப்பட்டி சுற்றுப் பகுதியில், கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, தமிழகத்தில் அரிதாக கிடைக்கக் கூடிய, கி.பி., 16 - 17ம் நுாற்றாண்டு காலத்து, சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சதிக்கல், தமிழகத்தில் காணப்படும் சதிக்கற்களிலே, சற்று வேறுபாடுடையதாகக் காணப்படுகிறது. பொதுவாக, கணவன் இறந்த பின், மனைவி மட்டுமே, சிதையில் (தீயில்) பாய்ந்து இறந்ததை காட்டும் வகையில், சதிக்கல் நட்டு வழிபடுவர். ஆனால், இந்த சதிக்கல்லில், தாய் தன் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு, தீயில் பாய்ந்த நிலை காணப்படுகிறது. அப்பெண்ணின் சிகை அலங்கார நிலை, அணிகலன் அலங்கார நிலையைக் கொண்டு, இந்த கல், கி.பி., 16 - 17ம் நுாற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என, கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பிற்காலத்தில், ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், தங்கள் காவல் தெய்வங்கள் எனக் கருதி, இந்த சதிக்கல்லின் இரு பக்கமும், இரு கற்களை நட்டு, தற்போது வணங்கி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar