Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகன் துதிகள்! சண்முக நவகிரக பாமாலை! சண்முக நவகிரக பாமாலை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்ரமண்ய புஜங்கம் (தமிழில்)!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 அக்
2014
03:10

சதாபாலன் ஆனாலும் வினைவெற்பு டைப்பான்
பெருயானை ஆனாலும் சிவச்சிங்கச் செல்வன்
சதாநான் முகன் இந்திரன் தேடுசோதிக்
கதிர்மா கணேசக் கரி என்னுள் வாழி.

கதைகானம் பாடல்களில் வல்லன் அல்லேன்
உரை காவியம் பாடியும் வல்லன் அல்லேன்
சிதானந்தம் ஆறுமுகம் கொண்ட வீறு
உளம் வாழ்வதால் யான் கவிபாடுகின்றேன்.

மயில்ஏறு செல்வன் மறைசொல்லு முதல்வன்
மனம் ஈர்க்கும் மேனி மகான்போற்று மானி
அயிற்செங்கை வேலன் அரன்தந்த பாலன்
அரும்வேதசீலன் குகன்பாதம் போற்றி.

இம்மானுடர் என்றும் எம்முன்னே வந்தால்
இமைப்போதில் மாந்தர் கரையேறி உய்வார்
கைம்மான் பரன் தந்த அம்மான் குகன்தான்
சொல்வான் கடல்மோது கோயில் வளர்ந்தே.

அலைமோதி மோதி அடங்கும் அதேபோல்
நிலைகெட்டு மாந்தர் தறிகெட்டு ஓட
அலைபோல ஆட்டும் விதி என்முன் மங்கும்
மலைமங்கை பாலன் இதைச் சொல்வான் போலும்.

சகம்தந்த வெற்பில் சுகந்தப் பொருப்பில்
உவந்தேறினால் கீர்த்தி சிலம்பேறுவார்கள்
குகன் சொல்லவென்றே அவன் வாழும்வெற்பே
சுகந்தபிராட்டி மகன் கந்த வெற்பே.

வினைக்காடு மாய்க்கும் இருட்பாடு தேய்க்கும்
தனைத்தான் விளக்கும் தனிப் பேறளிக்கும்
முனிக்கூட்டம் மொய்க்கும் மூதறிவாளர் துய்க்கும்
பனிக்காட்டுப் பௌவத் தனிக் கோயில் வாழ்வான்

மணிக்கோயில் மாட்டுவரைக் கோயில் பாட்டுத்
தணிக்காட்டு மத்தி விளங்கும்பொற்கட்டில்
அணிப்பட்டுப் போத்தி அரும்பூக்கள் சார்த்தி
அதன்மீதிருப்பான் குகன் கந்த வெற்பான்.

சலங்கை பொற்றண்டை சரம் முத்து வெண்டை
குலுங்கும் சிலம்போ புலம்பும் புலம்பும்
இலங்கும் நலங்காத் துளங்கும் விளங்கும்
 பொலம்பூ மலர்பொற் கழல்போற்றி போற்றி.

பொன்வண்ணப் பட்டு புரண்டாடு கட்டு
நிறைந்தாடு மேகலை மணிமுத்து விட்டே
அனந்தாடு காஞ்சி அதன்மேல்பொன் கத்தி
திகழ்ந்தாடு கந்தன் இடைபோற்றி போற்றி.

வேடர் தலைவன் மகள்வள்ளி கும்ப
பாரத் தனங்குங்கு மச்சாந்து தோய்ந்த
ஆடப்பொன் னணியின் னகல் மார்பு கந்தன்
நாடாண்டு நமைகாக்கும் பீடொன்றே போற்றி.

மறையோனைக் குட்டிவெம் மதயானை முட்டிச்
சிறைமீட்டுத் தேவர் குறைகேட்டு வாட்ட
முறையீட்டை ஈட்டி எதிரிதலை வீட்டி
நிறை உன் ஈராறும் கரம் போற்றி.

சரத்கால சந்திரன் இருப்பானேல் ஆறு
 குறையாது தேயாது நிற்பானேல் வானில்
பதினாறு கலையோடு பகற்பொழுதுகூட
உரைப்பேன்யான் கந்தா உன் முகங்களுக்குவமை.

முத்தாடு மூரல் முகிழ்த்தெங்கும் சோதி
முத்தத் திருக்கோவை நித்தம் பழிக்கும்
புத்தம் புதுச்சோதி பூங்குமுதச் செவ்வாய்
நித்தம் நிலா எறிஉன் ஆறுமுகம் போற்றி.

வித்தாரமாய்ச் செவ்வரியோடி நீண்டு
புத்தம் புதுக்கமல மலர் அழகை வென்று
நித்தம் மரகதநீல மணிச்சோதி வென்று
சித்தம்கவர் கடைவிழியை எனக்கருளில் என்ன?

சிரன் சீவியாகென்றரன் நித்தம்கூறும்
முறைமுறை முக்கண் முதல்வன் ஓர் ஆறு
முகைகூறி முத்தாடி மோந்துமகிழ் காந்த
சிறந்தொளி பரந்த உனது ஆறுதலை போற்றி.

ஆரம் அணி கேயூரம் மரகத முத்தாரம்
கூறுபடை நீறுபடச் சீறுக் கரவேலும்
ஏறுமயில் வாகனமும் இடையில் இளம்படுச்
சீரை ஒளி சோதிவிட வா முருகா என்முன்.

இங்கு வருவாய் பாலா என்றரனார் கூற
மங்கை சிவகாமி உடைத் தங்க மடி இருந்து
பொங்கொளி சலங்கைமணிக் கங்கணம் குலுங்க
சங்கரன் கரம்தாவும் மங்களனே போற்றி.

குமரா குழந்தாய் குகாவெற்றி வேலா
மயில் வாகனா மா மனோமோகன வா
மகாமாரி கௌமாரி மைந்தா ஏ கந்தா
வரந்தா வரந்தா வளர் வள்ளி காந்தா.

புலன்கள் நலம் கெட்டொடுங்கி அடங்கிக்
கபம் தொண்டையில் வந்திறுக்கி முறுக்கிப்
பயம் வந்து கவ்வி உடல் நைந்துடைந்து
யமன் வந்திழுத்தால் குகா வந்து காப்பாய்.

இவன் நெஞ்சில் பாசக் கயிறு பூட் டிறுக்கு
விடாதே பிடி குத்துடம்பை நொறுக்கு
அவன் ஆவி பற்று என எமன் தூதர் வந்தால்
சிவன் மைந்த நீவந்தெனையாள வேண்டும்.

மலர்ச் சேவிக்கென் வணக்கம்  வணக்கம்,
உடல் பூமி தோய விழுந்தே எழுந்தேன்
யமன் வந்தபோதில் உரைசெய்ய ஆற்றேன்
அவன் வந்து நின்றால் மயில்மீது தோன்று.

நூறாயிரம் அண்டம் வீறோடு நின்று
மாராமல் ஆண்டான் மகாவீரனாக
சூராதி சூரன் கொடுங்கோல் ஒழித்தாய்
குமரா என் கோரக் குறை ஏனோ கேளாய்

தாராசுரன் சேனை தன்னோடும் அண்ணன்
சிங்கன் எனும்பேர் ஈராயிரம் கண்ணன்
வேரோடு நீறாக்கும் சூரா குமரா.
மாராபி ராமா என் மனக்கவலை தீராய்.

வலிப்போடு பீளை இழுப்போடு காய்ச்சல்
துடிக்கும் தொழுநோய் உருக்கும் வெங்காசம்
உலுக்கும் குலைக்கட்டி சூலோடு குன்மம்
நடுக்கம் எடுத்தோடும் உன்பன்னீர் நீறால்.

கண்கந்தன் ரூபம் காதுன்றன் கீர்த்தி
வாய்கந்தன் காதை கைகந்தன் தொண்டு
எண்சாண் உடம்புன் திருப்பாத சேவை
என்செய்கையாவும் உன்மயமே ஆக,

முனிக்கும்பலுக்குக் கணக்கற்ற நன்மை
வரம்பின்றி ஈயும் பலதெய்வம் கோடி
குறவர்க்கும் மறவர்க்கும் பரவர்க்கும் முக்தி
தரும் தனிப்பெருந்தெய்வம் குகன் அன்றி யாரோ.

மனைமக்கள் நண்பர் உறவினர் மற்றோர்
கனைகால் நடைகிள்ளை பூவை புறாவும்
மனைவாழ் இருபாலர் ஆண்பெண் அடங்கல்
குகா உன்னையே எண்ண வாழத் துதிக்க.

பொல்லா விலங்கு புழுப்பூச்சி பொட்டு
நல்லார் நலிகிருமி வண்டுடன் நண்டு
பொல்லாத நோயாவும் இல்லாது போக
வல்லாள உனது வடிவேற் சோதி பட்டு.

தான் பெற்ற பிள்ளை தவறேதும் செய்தால்
தாமே பொறுப்பர் நற்றந்தையும் தாயும்
வான் வண்ண வேலா, நீயே என் பெற்றோர்
கோன் நீ என் குற்றம் பொறுத்தாள் என்னப்பா.

வணக்கம் வடிவேல் தனக்கும் உனக்கும்
வணக்கம்  வளர்பொன் மயில்சேவலுக்கும்
வணக்கம் கிடாவண் கடற்கும் கரைக்கும்
வணக்கம் வணக்கம் என் கந்தப்பனுக்கே.

ஜயிப்பாய் ஜயானந்த பூமானே சீமான்
ஜயிப்பாய் ஜயிக்கொணா வில்லாள மல்லா,
ஜயிப்பாய் களிப்புக் கடல் ஏழை பங்கா
ஜயிப்பாய் நடிப்போன் குமாரா மாதீரா

புஜங்க பிரயாத விருத்தச் சந்தத்தில்
புஜங்கப் பெருமான் புதல்வன் துதியை
நிஜங் கற்பவர் கேட்பவர் பத்தி செய்வோர்
பெரும்பேறு பெற்று குகன்நாடு சேர்வார்.

(ஆதிசங்கரர் இயற்றியது)

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, நிலக்கல் பகுதியில் மேம்பட்ட சிறப்பு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தைல காப்பு உற்ஸவத்தில் நுாபுர கங்கை தீர்த்தத்தில் ... மேலும்
 
temple news
சேவூர்: சேவூரில், ஆயிரம் ஆண்டு பழமையான கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar