Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்ரமண்ய புஜங்கம் (தமிழில்)! தண்ணீரில் மந்திரம்! தண்ணீரில் மந்திரம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சண்முக நவகிரக பாமாலை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 அக்
2014
03:10

ஆறுமுகன் புகழை அன்றாடம் போற்றிடவே
ஏறுமுகம் கிடைக்கும்! சேரும் புகழ் ஏராளம்!
ஒன்பான் கிரகமுமே ஓடிவந்து காப்பாற்றும்!
கண்ணான வேழமுகம் காப்பு

செப்பும் சிலம்புரியின் சிங்காரம் தந்த கவி
சுப்பிரமணியனுக்குத் தூதாகும்! அப்புறமாய்
ஒன்பான் கரிமுகமே ஓங்காரம் கேட்டவுடன்
இன்பமெல்லாம் கூட்டும் இனி!

சூரியன்:
ஆறிரு கரங்கள் கொண்டு அடியார்க்கு அருள் வழங்கி
சீரிய வாழ்வு நல்கும் செந்திலே பழநி வேலா!
சூரிய திசையிலே உன்னை துதிட்டேன் காக்க வாராய்!
காரியம் யாவினுக்கும் கை கொடுத்து உதவுவாயே!

சந்திரன்:
இந்திரன் முதலானோர்கள் இளமையாய் விளங்கும் உந்தன்
மந்திரம் சொல்லி நல்ல மகத்துவம் பெற்றது உண்டு!
சந்திர திசையில் உன்னை சந்தித்துப் போற்றுகின்றேன்!
வந்திடும் செல்வமெல்லாம் வரத்தினால் வழங்குவாயே!

செவ்வாய்:
ஔவைக்குக் கனி தந்தாய்! அருணகிரி நாதருக்கு
திவ்வியக் காட்சி தந்தாய் திருவருள் கொடுப்பதற்கே
செவ்வாயின் திசையின் உன்னை சேவித்துப் போற்றுகின்றேன்!
வையகம் புகழும் நல்ல வாழ்க்கையை வழங்கு வாயே!

புதன்:
கதம்பமும் முல்லை மல்லி கனிவுடன் சூடும் கந்தா
சதமென ஆயுள் நல்கி சகலமும் அருளுவாயே!
புதன் திசை நடக்கும் நேரம் போற்றி நான் வணங்குகின்றேன்!
இதம் தரும் வாழ்வை நல்கி இன்பத்தை வழங்குவாயே!

வியாழன்:
ஆறுமுகம் கொண்ட செல்வா! அழகிய வள்ளி நேசா!
பெருமைகள் வழங்கி நாளும் பிறர் போற்றும் வாழ்க்கை ஏற்க
குருதிசை நடக்கும் நேரம் குமரனை வணங்குகின்றேன்!
திருவருள் தருவதோடு செல்வாக்கும் அருளுவாயே!

சுக்ரன்:
தக்கதோர் வாகனங்கள் தனி இல்லம் மனைவி மக்கள்
அக்கறை கொண்டு நாளும் அசுரகுரு வழங்கும் மென்பார்
சுக்கிரதிசையில் நாளும் சுப்பிரமணியன் உன்னை
சிக்கெனப் பிடித்த தாலே சிறப்பெலாம் வழங்குவாயே!

சனி:
பிணியெலாம் அகலவேண்டிய பெரும் பொருள் கிடைக்க வேண்டி
அணிதிகழ் வாழ்வு வேண்டி அல்லல்கள் அகல வேண்டி
சனிசெல்லும் திசையில் நாளும் சண்முகா உனைத் துதித்தேன்!
கனிவுடைத் தெய்வம் நீயே காட்சி தந்தருளுவாயே!

ராகு:
நாகத்தின் வடிவாய் நின்று நடந்திடும் தோஷம் நீக்கி
போகத்தை வழங்குதற்க பூமியில் அருள் கொடுக்கும்
ராகுவின் திசையில் உன்னை ரட்சிக்க வணங்குகிறேன்!
பாதமே பணிந்தேன் கந்தா பதினாறு பேறும் தாராய்!

கேது:
ஆதரவு வழங்குதற்கும் அண்டிய வழக்கு எல்லாம்
தீதின்றி மாறுதற்கும் திறமைகள் தெரிவதற்கும்
கேதுவின் திசையில் உன்னை கோதின்றி வணங்குகின்றேன்
சக்தியின் மகனே வேலா சண்முகா அருளுவாயே!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar