கல்யாணத் தடைகள் நீங்க வேண்டும்; விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாழம்பூ மடல்களால் பாவாடை தைத்து, அதை அம்பாளுக்கு சாத்தி வழிபட வேண்டும். பாவாடை தயாரிக்கும்போது ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தாழை மடல், அதாவது இலையின் நுனிப்பகுதி மேற்புறம் இருக்கும்படி மடல்களை தைப்பது மிகவும் முக்கியம். இப்படி தைக்கப்பட்ட பாவாடையை அம்மனுக்கு அணிவித்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது புஷ்ப விதி. தாழை மடலின் நுனி கீழ்ப்புறம் இருக்குமாறும் பாவாடை தயாரித்து அம்மனுக்கு அணிவிக்கலாம். இப்படி அணிவித்தால் அந்த பக்தருக்கு ஆடை அணிகலன்களில் குறை நேராது என்கிறார்கள்.