கோவை, இடையார்பாளையம், பூம்புகார் நகரில் உள்ளது, கற்பக விநாயகர் கோயில். இங்கே காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காலபைரவர், விஷ்ணு துர்க்கை, பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோரையும் தரிசிக்கலாம். திருமணத் தடை நீங்க, புத்திரபாக்கியம் பெற விரும்புவோர், தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகள் இங்கு வந்து 11 தேங்காய்களை மாலையாகக் கோத்து கற்பக விநாயகருக்குசாத்தி வழிபட, விரைவில் நல்லது நடக்கும்!