மறக்க முடியாத செயல்களால் பிறர் மனதில் இடம் பிடிக்கும் மகர ராசி அன்பர்களே!
குரு டிசம்பர் 3-ந் தேதி 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8-ம் இடத்து குரு பொதுவாக மன வேதனையையும், நிலையற்ற தன்மையையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளை கொடுப்பார் என்பது ஜோதிட வாக்கு. ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். கேது, சூரியன் மாதம் முழுவதும் நன்மைகளைத் தருவார். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும். சுக்கிரன் டிச.7வரையும், புதன் டிச. 8-ந் தேதி வரையும் சாதகமாக நின்று நற்பலனை தருவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பு தொடரும்.பண வரவு இருக்கும். சொந்த பந்தங்கள் வருகை இருக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறலாம். கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வா ய்ப்பு உண்டு.
தொழிலதிபர், வியாபாரிகளுக்கு போட்டியாளர்களின் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். டிசம்பர் 8,9ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். புதிய முதலீட்டு விஷயத்தில் அதிக கவனம் தேவை. நவ. 25,26,29, 30-ந் தேதிகளில் பணம் விரயம் ஆகலாம். கவனம்.
கலைஞர்கள், அரசியல்வாதிகள் ஓரளவு முன்னேற்றம் காண்பர்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். டிசம்பர் 7க்கு பிறகு அதிக கவனம் வேண்டும்.
விவசாயிகள் பயிர்கள் வகையில் ஓரளவு வருமானம் பெறுவர். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருவாய் இருக்காது. பெண்கள் மகிழ்ச்சியாக காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரும். உடல்நலம் சுமாராக இருக்கும்.