மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அதிகவேலை நல்ல வருமானம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2014 05:12
ஆன்மிகத்தில் அதிகபற்றுள்ள மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் சனி,கேது சாதக பலனைக் கொடுப்பார்கள் . செவ்வாய் ஜன. 2க்கு பிறகு நல்ல பலன் கொடுப்பார். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் பாதகம் இல்லை. குரு டிச. 23ல் அதிசாரத்தில் இருந்து விடுபட்டு வக்ரம் அடைந்து கடக ராசிக்கு மாறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். குரு தனது 5-ம் இடத்துப் பார்வையாலும் நன்மை தருவார். தடைகள் விலகி, செயல்பாடுகளில் எளிதில் அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் சிறக்கும். மதிப்பு மரியாதை கூடும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். அதேநேரம், புதனால் உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம்.அவர்களிடம் சற்று ஒதுங்கி இருக்கவும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றமும். ஊதிய உயர்வும் ஏற்படும். டிசம்பர் 17,18,19ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு சூரியனால் பொருள் விரயம் ஏற்படலாம். தொழிலதிபர்களுக்கு ஆரம்பத்தில் வருமானக்குறைவு வரலாம். போட்டியாளர்கள் வகையில் தொல்லை வரும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை எளிதில் பெறலாம். அரசியல்வாதிகள், எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரை மூலம் முன்னேற வழிகாண வேண்டும்.
விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை காணலாம். நில விவகாரங்களில் தீர்ப்பு தள்ளி போகலாம். பெண்கள் புத்தாடை, நகை வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரும். உடல் நலம் சுமாராக இருக்கும்.