கீழக்கரை: உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி,நேற்று மாலை 4:30 மணியளவில் மூலவருக்கு 18 வகையான அபிஷேக சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. நந்திதேவருக்கு அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டது. சிவபுராணம், சிவநாமஅர்ச்சனை, பஜனைகள் நடந்தது. நாளை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகளை சமஸ்தான நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.