பதிவு செய்த நாள்
03
ஜன
2015
12:01
ஊட்டி: ஊட்டி காந்தல் காசிவிஸ்வநாதர் கோவிலில், வரும், 4ம் தேதி (நாளை) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை, 10:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலசபூஜை, மகாயாகம், தீபாராதனையும், காலை, 11:30 மணிக்கு, காசிவிஸ்வநாத சுவாமி, விசாலாட்சி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. பகல், 1:00 மணிக்கு அன்னபிரசாதம் வழங்குதல், 2:00 மணிக்கு சிவகாமி அம்பாள் உடனமர் நடராஜ பெருமானுக்கு அபிஷேகமும், திருவெம்பாவையும் நடக்கிறது. வரும், 5ம் தேதி காலை, 6:30 மணிக்கு திருபள்ளி எழுச்சி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை, மடாதிபதி மருதாசல அடிகளார், தட்ஷிணாமூர்த்தி மடலாய அறங்காவலர் குழு, காசிவிஸ்வநாத சேவா சங்கம், முன்னேற்ற சங்கம், விசாலாட்சியம்பாள் மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.