மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் உள்ள பாலமுருகன் கோவிலில் பால முகலேஷ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் பாலமுருகன் கோவில் வளாகத்தில் உள்ள பால முகலேஷ்வர ருக்கு பிரதோஷ வழிப்பாடு நடந்தது. பாலாம்பிக்கைக்கும் மற்றும் சீனிவாச பெருமாள் சுவாமி பூதேவி, ஸ்ரீதேவிக்கும் சிறப்பு பூஜையும் ஏற்பாடு செய்தனர். தேவன் மருத்துவமனை சேர்ந்த சந்திரசேகர் அன்ன தானம் வழங்கினார். விழாவில் கோவில் நிர்வாகத்தினர் தனபால், ஜெயராமன், வெங்கட்ராமன் பங்கேற்றனர்.