Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோஷ்டியூரில் வேடுபறி உற்சவம்! பத்ரகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்றாயபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 118 ஏக்கர் நிலம் ஏப்பம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2015
12:01

ஓமலூர் தாலுகாவில், 118 ஏக்கர் கோவில் நிலத்தை, கோவில் பெயருக்கு பட்டா மாற்றம் செய் யாமல், வருவாய்துறையினர், போக்குகாட்டி வருகின்றனர். எனவே, அந்நிலத்தை, முறைகேடாக விற்கும் பகீரத முயற்சியில், ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த பாகல்பட்டி கிராமத்தில், மிகவும் பிரசித்தி பெற்றது சென்றாய பெருமாள் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும், மார்கழி மாதத்தில், 15 நாள் விழா நடக்கும். விழா முத்தாய்ப்பாக, வைகுண்ட ஏகாதசியன்று, தேரோட்டம் கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம்.இக்கோவில், நிர்வாகத்துக்கு உட்பட்டது புஜங்கீஸ்வரர் என்ற சிவன் கோவில். இரு கோவில்களும், 200 ஆண்டுக்கும் மேலாக பழமை வாய்ந்தது. இந்த கோவிலுக்கு சொந்தமான, 286 ஏக்கர் நிலம், ஓமலூர் தாலுகாவின், பல்வேறு பகுதிகளில் உள்ளது. இதில், 168 ஏக்கர் நிலங்கள் மட்டுமே, கோவில் பெயருக்கு, பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள, 118.33 ஏக்கர் நிலம், இன்னமும், கோவில் பெயருக்கு மாற்றம் செய்யவில்லை.

இந்நிலங்கள், 2012ல், 40 நபர்களுக்கு, மேல் மகசூல், உரிம குத்தகைக்கு விடப்பட்ட அதே நேரத்தில், கோவில் நிலங்களை, தனி நபர், நிறுவனம் மற்றும் எந்தஒரு அமைப்புக்கும், பத்திரப்பதிவு, பட்டா, கட்டுமான வரைபடம் மற்றும் மின் இணைப்பு எதுவும் வழங்கக்கூடாது என, மாவட்ட கலெக்டர் முதல், டி.ஆர்.ஓ., மேட்டூர் ஆர்.டி.ஓ., ஓமலூர் தாசில்தார் ஆகியோர், முறையே, அனைத்து அதிகாரிகளுக்கும், அடுத்தடுத்து, கடிதம் அனுப்பப்பட்டது.சேலம் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, இந்த கடிதத்தை அனுப்பினார். அதேபோல் இந்நிலங்களை, கோவில் பெயருக்கு, பட்டா மாற்றம் செய்யக்கோரியும், தொடர்ந்து, கடிதம் அனுப்பப்பட்டது. எனினும், இதுவரை நடவடிக்கை இல்லை. அதிகாரிகளின் அலட்சியத்தை சாதகமாக பயன்படுத்தி, கோவில் நிலங்களை முறைகேடாக விற்கும் நடவடிக்கையில், சிலர், தீவிரமாக களமிறங்கி இருப்பதாக, "பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, ஓமலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் வைத்தீஸ்வரன் கூறியதாவது: தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலமும், முத்துநாயக்கன்பட்டி, பாலப்பட்டி கிராமத்தில், 10 ஏக்கர் நிலமும் இருந்தது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து, பலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த, 13 ஏக்கர் நிலம், கோவில் கணக்கில் கொண்டு வராமல் விடுபட்டுள்ளது. இந்த விவரம் தெரிந்தும், கண்டுகொள்ளாத அதிகாரிகள், முறைகேடு விற்பனைக்கு துணையாக உள்ளனர்.எனினும், அந்த இடத்துக்கு, பட்டா வழங்கவில்லை. அதேபோல், கோவிலுக்கு சொந்தமான, 118.33 ஏக்கர் நிலத்தை, கோவில் பெயருக்கு பட்டா வழங்காமல், போக்குகாட்டும் வருவாய்துறையினர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு, ஆதரவாகவே இருந்து வருகின்றனர். இது தொடர்பாக, இணை ஆணையர் பலமுறை கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

சென்றாயபெருமாள் கோவிலின் பரம்பரை தர்மகர்த்தா சீனிவாசன்- ஹேமலதா தம்பதி, கோவில் நிலத்தை முறைகேடாக விற்றதால், 2000ம் ஆண்டில் சீனிவாசன், 2008ல் ஹேமலதா ஆகியோர், பரம்பரை தர்மகர்த்தா பதவியில் இருந்து, "டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். மேல்முறையீடு வழக்கில், அவர்களுக்கு, எதிராகவே, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.எனினும், அவர்களது தாத்தா, மறைந்த சவுந்திரராஜன் பெயரில், கோவில் உள்ளது. அவர்கள், கோவில் நிலத்தை முறைகேடாக விற்கும், பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, கோவில் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய, மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar