ஷீரடி மேம்பாட்டிற்கு ரூ. 1200 கோடி நிதி :சாய்பாபா டிரஸ்ட் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2015 04:01
ஷீரடி: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஷீரடி பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்குமாறு சாய்பாபா கோயில் டிரஸ்ட் அம்மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது. வரும் 2018-ல் சாய்பாபா உத்சவ் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 25 லட்சம் பக்தர்கள் வருவர் என திர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு சாலை போக்குவரத்து உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்களுக்கும், பாதுகாப்பு பணிகளுக்காவும், ரூ. 1200 கோடி நிதி ஒதுக்கிட வேண்டும் என சாய்பாபா அறக்கட்டளை அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் ராம்ஷிண்டே தெரிவித்துள்ளார்.