பதிவு செய்த நாள்
04
பிப்
2015
03:02
திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெருவிழா பிப்., 12 ல் துவங்கி மார்ச் 3 வரை நடக்கிறது.
பிப்., 12 மாலை 6 மணிக்கு பூத்தமலர் பூ அலங்கார நிகழ்ச்சி, பிப்., 13 காலை 9 மணிக்கு பூச்சொரிதல் விழா, பிப்., 15 இரவு 8 மணிக்கு சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 17 காலை 12 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி, பிப்., 27 பகல் 2:30 மணிக்கு பூக்குழி, இரவு 8 மணி அம்மன் தேரோட்ட விழா, பிப்., 28 இரவு 10 மணிக்கு தசாவதாரம், மார்ச் 1 காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 2 இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், பிப்., 3 மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.
விழா நடக்கும் நாட்களில் கோயில் மைதானத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. விழா ஏற்பாடுகள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் கணேசன் தலைமையில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.