பதிவு செய்த நாள்
09
பிப்
2015
12:02
சேலம் : சேலம், குகை கருங்கல்பட்டி வீர சைவ ஜங்கம கோவிலில், மஹா சிவராத்திரி விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சேலம், குகை கருங்கல்பட்டி வீர சைவ ஜங்கம கோவிலில், மஹா சிவராத்திரி விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப்.,15 இரவு வாஸ்து பூஜை, ஸ்தல சுத்தி, கிராம சாந்தி, பிரவேச வேலி ஆகியவை நடக்கிறது.பிப்.,16 அதிகாலை, புண்ணியவாசணம், கணபதி ஹோமம், கோமாதா பூஜை ஆகியவை நடக்கிறது.
அன்று, கருங்கல்பட்டி இரண்டாவது தெரு விழா பந்தலில், பார்வதி குடும்ப சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.பிப்.,17 காலை லிங்காதாரத்தை தொடர்ந்து சிவன், பார்வதி உற்சவமூர்த்திகள் திருவீதி உலாவும், மாலையில் ரிஷப வாகனம் அழைத்தல், சேலம் குகை வீரபத்திர ஸ்வாமி தேவஸ்தானத்தில் இருந்து திருமஞ்சனம், சக்தி வீரகாசி அழைத்தல் ஆகியவை நடக்கிறது.மாலையில் மஹா அபிஷேகத்தை தொடர்ந்து, 108 சங்கு அபிஷேகம், லிங்காதாரணம் ஆகியவை நடக்கிறது. பிப்.,18 காலையில் திருவிளக்கு பூஜையும், அன்னதானமும் நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை வீரசைவ ஜங்கம குல மக்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.