பதிவு செய்த நாள்
11
பிப்
2015
11:02
மங்கலம்பேட்டை: விருத்தாசலம் அருகே சிதிலமடைந்த திருநடனம் புரிந்த மகாதேவேஸ்வரர் கோவில் கட்ட பூமிபூஜை போடப்பட்டது.
மங்கலம்பேட்டை அடுத்த சின்னபரூர் கிராமத்தில்ஆயிரம்ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் பாழடைந்து இடிந்து சிதிலமடைந்து கிடந்தது. 50ஆண்டுகளுக்கு மேலாக அதனை யாரும் கவனிக்காததால், கோவிலைச் சுற்றி முட்புதர்மண்டியது. கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கு முன், சின்னபரூர் வந்த சின்ன சேலம் முருகன் சித்தர் என்பவர், இங்கு பழமையான சிவன் கோவில்பராமரிப்பின்றி உள்ளது. அதை சீரமைத்து வழிபட வேண்டுமெனகிராம மக்களிடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து கிராம மக்கள்முட்புதர்களை பொக்லைன் மூலம்அகற்றியபோது, சிதிலமடைந்துகிடந்த கோவிலில் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் இரண்டுசிவ லிங்கங்கள், ஒரு நந்தி சிலைகண்டெடுக்கப்பட்டது. அங்கிருந்தகல் தூண்களில் புரியாத எழுத்துக்களில் குறிப்புகள் இருந்த நிலையில்,06.01.1337 என்ற எண் மட்டுமேதெளிவாக இருந்தது. கோவிலைஆய்வு செய்த தொல்லியல் துறையினர், இதனை திருநடனம் புரிந்தமகாதேவேஸ்வரர் கோவில் எனதெரிவித்தனர்.
தொடர்ந்து, கோவில் அருகே ஆஷ்பெஸ்டாஷ் ஷீட் மூலம் கொட்டகை அமைத்து, அதில் சிவலிங்கங்கள், நந்தி சிலையை வைத்து வழிபட்டனர்.இந்நிலையில், திருநடனம்புரிந்த மகாதேவேஸ்வரரருக்குகோவில் கட்ட கிராம மக்கள்முடிவு செய்ததைத் தொடர்ந்து, நேற்று பூமிபூஜை நடந்தது. ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.