கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், தச்சூர் ஆக்சாலிஸ் சர்வதேச பள்ளி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் தச்சூர் அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பாரத்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் முஸ்தபா வரவேற்றார். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மூர்த்தி, சிவகுமார், இளங்கோவன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கோவில் உட்புறத்திலும், வெளி புறத்திலும் சுத்தம் செய்தனர்.