பதிவு செய்த நாள்
27
மார்
2015
12:03
திருத்தணி: திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று, தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 10ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, நேற்று காலை 6:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, யாகசாலை பூஜை நடந்தன. நேற்று காலை 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினசரி, மூலவர் அம்மனுக்கு காலை 10:00 மணிக்கு, சந்தன காப்பு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. வரும் ஏப்., 1ம் தேதி, திரவுபதி அம்மன் திருக்கல்யாணம்; இரவு, திரவுபதி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. ஏப்., 3ம் தேதி காலை, சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், இரவு, புஷ்ப பல்லக்கு உற்சவம்; ஏப்., 12ம் தேதி காலை, துரியோதனன் படுகளம், மாலை, தீமிதி திருவிழாவும்; ஏப்., 13ம் தேதி காலை, தர்மர் பட்டாபிஷேகம் நடைபெறுகின்றன.