காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சர்வதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உத்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2026 11:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான இன்று சந்திரசேகரர் வெள்ளி இடப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தொடர்ந்து, சர்வதீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி உத்சவம் நடந்தது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், தினமும், காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இதில் ஆறாம் நாள் உத்சவமான கடந்த மாதம் 27ம் தேதி காலை 63 நாயன்மார்கள் உத்சவமும், இரவு வெள்ளி தேரோட்டமும் நடந்தது. ஏழாம் நாளான கடந்த 28ம் தேதி காலை தேரோட்டம் நடந்தது. இதில், 10ம் நாள் உத்சவமான கடந்த மாதம் 31ம் தேதி இரவு பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா விமரிசையாக நடந்தது. இதில், 13வது நாள் உத்சவமான இன்று காலை சந்திரசேகரர், வெள்ளி இடப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். மதியம் 1:30 மணிக்கு சர்வதீர்த்தகுளத்தில் திரிசூல அஸ்திரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீர்த்தவாரி உத்சவம் விமரிசையாக நடந்தது. இரவு யானை வாகன உத்சவம் நடந்தது.