Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பால விநாயகர் கோவிலில் 3ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்வாமி ஊர்வலத்தில் மங்கள இசை இந்தாண்டு நிறுத்தத்தால் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2015
02:04

ஈரோடு : ஸ்வாமி ஊர்வலத்தில் மங்கள இசை நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம், தேர் திருவிழா கடந்த, 17ம் தேதி துவங்கியது. பெரிய மாரியம்மன் மட்டுமின்றி, நடு மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் என, மூன்று கோவில்களிலும், திருவிழா நடக்கிறது. இவை அனைத்தும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.ஆண்டுதோறும் தேர் திருவிழாவுக்கு முதல் நாள் வரை, நடு மாரியம்மன் உற்சவர் ஸ்வாமி, தினமும் காலை, மாலை வேளைகளில் வீதி உலா செல்வது வழக்கம். சுவாமிக்கு முன் தவில், நாதஸ்வரம், ஜால்ரா என வாத்திய கோஷ்டியினர் முன் செல்வர். இந்தாண்டும் அதுபோல், 25ம் தேதி முதல் நடு மாரியம்மன் கோவிலில் இருந்து தினமும் காலை, மாலை வேளைகளில் உற்சவர் வீதி உலா வருகிறார்.பொன் வீதி, அக்ரஹார வீதி வழியாக பெரியார் வீதி சென்று, அங்கிருந்து கோவிலை ஊர்வலம் அடைகிறது. நேற்று மாலை வரை, ஊர்வலம் நடந்தது. இன்று (1ம் தேதி) தேர் திருவிழா நடப்பதால், நேற்று (31ம் தேதி) ஊர்வலம் நிறைவு பெறும்.இந்தாண்டு தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட வாத்திய கோஷ்டியினர் ஊர்வலத்தில் தவிர்க்கப்பட்டது. மாறாக வாகனம் ஒன்றில், ஸ்பீக்கர் கட்டி "பென் டிரைவ் மூலம் பதிவு செய்த நாதஸ்வர சத்தம் ஒலிபரப்பபட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் கூறியதாவது: நாதஸ்வரம், தவிலுடன் கூடிய வாத்திய கோஷ்டியினர் சத்தம் கேட்டு, பக்தர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து, வீதியை சுத்தம் செய்து, சுவாமி தரிசனம் செய்வர்.முன் எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு பதிவு செய்த ஒலி நாடாவை ஸ்பீக்கர் மூலம் ஒலிபரப்பி செல்கின்றனர்.கோவில் நிர்வாகத்திடம் இதுபற்றி கேட்டோம். செலவுக்கு தொகை இல்லாததால், இந்த ஏற்பாட்டை செய்ததாக கூறினர். வாத்திய கோஷ்டிகள் இன்றி, சுவாமி ஊர்வலம் செல்வது, பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, என்றார். கோவில் செயல் அலுவலர் ராஜா, ""என் கவனத்துக்கு வரவில்லை. வழக்கமான முறையை, மாற்றி இருக்க வாய்ப்பில்லை. எனினும், இதுபற்றி விசாரிக்கிறேன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அய்யங்குளத்தில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நேற்றுமுன்தினம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நடந்தது.இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar