பதிவு செய்த நாள்
03
ஏப்
2015
01:04
உடுமலை : பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா, பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், இன்று நடக்கிறது.
மடத்துக்குளம், பாப்பான்குளத்தில் உள்ள ஞான தண்டாயுதபாணி கோவிலில், பங்குனி உத்திரம் முன்னிட்டு, இன்று காலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, கொடிமுடி தீர்த்த காவடிகள் வலம் வருதல், மாலை, 4:30 மணிக்கு, திருமஞ்சனமும், மாலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு, 8:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.