Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்காரு அடிகளாருக்கு ... உய்ய வந்தாள் அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லம்மன் கோவில் பார்வேட்டை உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
எல்லம்மன் கோவில் பார்வேட்டை உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2015
12:04

வாலாஜாபாத்: ஊத்துக்காடு எல்லம்மன் கோவிலில், பார்வேட்டை உற்சவம் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவத் திருவிழாவில், பார்வேட்டை உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம், கடந்த 10ம் தேதி துவங்கியது. அன்றிலிருந்து, எல்லம்மன் உற்சவர், பல்வேறு அலங்காரத்தில், சூரியபிரபை, சந்திரபிரபை, நாகம், பூதம், அன்னம், யானை, கிண்ணி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் 10வது நாளான நேற்று முன்தினம் மாலை 6:00 மணி அளவில், எல்லம்மன் தெப்பக்குளத்தை வலம் வந்தார்.இரவு 10:30 மணி அளவில், ஊத்துக்காடு எல்லம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பார்வேட்டை உற்சவத்திற்கு புறப்பட்டு சென்றார். அதன் பின் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள், அம்மனுக்கு பொங்கலிட்டும்; வேப்பிலை ஆடை அணிந்தும் நேர்த்திக் கடன் செலுத்தி வணங்கி சென்றனர்.

தெப்போற்சவம்: வாலாஜாபாத் அடுத்த, நத்தாநல்லுார் கிராமத்தில், தேவி எல்லம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, தெப்போற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 9:30 மணி அளவில், நத்தாநல்லுார் தேவி எல்லம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில், மேளம், தாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, தெப்பலில் எழுந்தருளினார். தெப்பத்தை மூன்று முறையாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நத்தாநல்லுார் கிராமத்தை சுற்றியுள்ள, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், தேவி எல்லம்மனை வணங்கி சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar