திருச்செந்தூருக்கு அருகே குதிரைமொழி தலத்தில் அமைந்துள்ளது கற்குவேல் அய்யனார் கோயில். இக்கோயிலில் கார்த்திகை மாதம் ஆறு நாட்கள் நடை பெறும் விழாவின், கடைசி நாள் விழாவான கள்ளர்வெட்டு வைபவத்தைக் காண அண்டை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். அன்றைய தினம் சாமியாடிக் கொண்டே வரும் பூசாரியின் கையில் நீண்ட அரிவாள் இருக்கும். அவரது இடக்கரத்தில் சீவப்பட்டு மாலையிடப்பட்ட இளநீர் இருக்கும். அதை வெட்டி நீரை தரையில் ஊற்றுவார். அவ்விடத்தில் நனைந்த மண்ணை பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள். அதைக் காகிதத்தில் கட்டி, பணப்பெட்டியில் வைக்க. குடும்பத்திலும், வியாபாரத்திலும் வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.