சேது சுப்பிரமணியபுரத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில், ராஜபதியில் உள்ளது. கைலாசநாதர் கோயில். ஞானகாரகனான, கேதுவின் அம்சமாக இத்தலத்தில் சிவபெருமான் அருளுவதால், இவரை வேண்டிக்கொள்ள அறிவான குழுந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. விவசாயம் செழிக்கவும். கால்நடைகள் ஆரோக்கியத்துடன் வாழவும், திருமணத்தடை, சர்ப்ப தோஷம், குழந்தை பேறு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள், தொழிலில் முன்னேற்றம் கிடைக்கவும் இத்தல பெருமானுக்கு வழிபாடு செய்கின்றனர்.