திருச்செந்தூர் கடல் பகுதியில் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லுவோர் தேங்காய் உடைப்பதை மரபாகக் கொண்டுள்ளனர். மீன் பிடிக்கச் செல்வோர் வெள்ளியிலான மீன்களையும், புதிதாகப் படகு கட்டுவோர் அதை கடலில் விடும்முன் வெள்ளியிலான கப்பல்களையும் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.