ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு 10 நாட்கள் திரு அவதார திருநாள் நடைபெறும். இதில் ஐந்தாம் நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் கண்டு, இரவு கருடாரூடரர்களாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கின்றனர். ஆழ்வார், தனித்தனியே மங்களா சாசனம் செய்த பிறகு ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி விழா நடக்கிறது.