வல்லநாட்டில் அமைந்துள்ள தம்பிராட்டி காளி கோயிலில் அருள்பாலிக்கும் அம்பிகை மூன்று கண்களுடன், கறுத்த மேனி, விரித்த சடை, எட்டு கைகள், அவற்றில் ஆயுதங்கள் தாங்கி காட்சி தருகிறாள். செவ்வாடை அணிந்து, சிரித்த முகத்துடன் அருளும் இந்த அம்பாளுக்கு சைவப் படையலே நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. ஓர் ஆங்கிலேயே அதிகாரி மண்டியிட்டு வணங்கிய பெருமை பெற்ற கோயில் இது. அம்பாளுக்கு சிவப்பு புடவை சாத்தி வழிபட்டால் புத்திர, திருமண தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.