அம்பிகையை யந்திர முறையில் ஸ்ரீ சக்ரம் வரைந்து வழிபடுவது சிறப்பு. அம்பாளின் சூட்சும வடிவமான ஸ்ரீ சக்ரத்தை, அம்பிகையின் முன்போ அல்லது சிலையின் அடியிலோ பிரதிஷ்டை செய்வர்.ஸ்ரீ சக்ரம் என்பதற்கு பெருமைமிகு சக்கரம் என்று பொருள். ஸ்ரீசக்ரத்தில் பராசக்தியின் சக்தி மட்டுமல்ல, 64 கோடி தேவதைகளும் இருப்பதாக தேவி புஜங்கம் என்னும் நூல் கூறுகிறது.முற்பிறவியில் செய்த புண்ணியம் இருந்தால் மட்டுமே ஸ்ரீசக்ர வழிபாட்டில் ஈடுபட முடியும். இதன் மூலம் அம்பிகையின் அருள் கிடைப்பதோடு, ஒருவன் பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுதலையும் பெறலாம் என சவுந்தர்ய லஹரி என்ற நூலில் சொல்லப்பட்டுஉள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் கோமதி அம்மன் சந்நிதி முன்புள்ள ஸ்ரீசக்ரம், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டஈஸ்வரியின் காதிலுள்ளதோடு வடிவிலான ஸ்ரீசக்ரம் ஆகியவை மிகவும் சக்திவாய்ந்தவை.