Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யனார் கோயிலில் 12 ஆண்டுக்கு பின் ... திருப்பதி தேவஸ்தான நிர்வாக குழு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மறையூர் மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் குண்டம் இறங்கினர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2015
12:04

உடுமலை : உடுமலை அருகே மறையூர், கோவில்கடவு மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று காலை, துவங்கியது; நாளை நிறைவடைகிறது. கேரள மாநிலம், மறையூர், கோவில்கடவு, அஞ்சுநாடு பகுதியில் அமைந்துள்ளது, மாரியம்மன், காளியம்மன் மற்றும் கருப்பசாமி கோவில். இக்கோவில் திருவிழா, கடந்த 21ல் காப்பு கட்டுதல் மற்றும் கொடிஏற்றுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு, அலங்காரம், பூஜை நடக்கிறது.நேற்று காலை, 5:00 மணிக்கு, தென்காசிநாதன் கோவிலில் இருந்து, நையாண்டி மேளத்துடன், அம்மனுக்கு தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. காலை, 8:00 மணிக்கு, அம்மனுக்கு தீர்த்த அபிேஷகம், விநாயகர் பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, தென்காசிநாதன் கோவிலில் இருந்து கும்பம் எடுத்துவரப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, முளைப்பாரி எடுத்தலும், 8:00 மணிக்கு, விவசாயப்பொருட்கள், ஆடு, மாடு, கோழிகள் ஏலம் விடப்பட்டன. இரவு, 10:00 மணிக்கு, பக்தர்கள் குண்டம் இறங்கி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்; கோவில் பூசாரி ராஜூ தலைமை வகித்தார்.இன்று காலை, 5:00 மணிக்கு, பால் குடம் எடுத்து வருதலும், 6:00 மணிக்கு, அம்மனுக்கு பால், தேன், இளநீர் அபிேஷகமும், 7:00 மணிக்கு, தென்காசிநாதன் கோவிலில் இருந்து அக்னி சட்டி எடுத்து வருதலும், நடக்கிறது.காலை, 8:00 மணிக்கு, பக்தர்கள் பறவைக்காவடி மற்றும் அழகு குத்தியும் ஊர்வலமாக வருகின்றனர்.காலை, 9:00 மணிக்கு, பொங்கல் வைத்தலும், மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், மதியம், 1:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, அம்மன் பூஞ்சோலை சென்றடைகிறார்.திருவிழா நிறைவு நாளான நாளை, காலை முதல் மாலை வரை, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar