திருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு திருக்கல்யாணம் முடிந்து, பட்டாபிஷேக ராமர் கோயிலில் எழுந்தருளினர். அங்கு பஜனைகள் முடிந்து வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. கோயில் நிர்வாகிகள் மரகதவல்லி, கண்ணன், விஸ்வநாதன், சிவராமன் ஏற்பாடுகள் செய்தனர்.