பதிவு செய்த நாள்
07
மே
2015
12:05
குறிச்சி : சுந்தராபுரம் அருகேயுள்ள மாரியம்மன் கோவிலில் விழா, கடந்த, 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாணமும், அன்னதானமும் நடந்தன. நேற்று காலை, குறிச்சி குளக்கரையிலுள்ள பொங்காளியம்மன் கோவிலிலிருந்து, சக்தி கரகம், தீர்த்தகுடம், பால்குடம், பூவோடு ஆகியவற்றுடன் சிம்ம வாகனத்தில் அம்மன் ஊர்வலம் புறப்பட்டு, மதியம் கோவிலை வந்தடைந்தது.தொடர்ந்து, அம்மனுக்கு அக்னி அபிஷேகம் நடந்தது. மாலை, 4:00 மணி முதல் பொங்கல், மாவிளக்கு வழிபாடும், வாணவேடிக்கையும் நடந்தன. திரளானோர் அம்மனை வழிபட்டுச் சென்றனர். இன்று காலை, மஞ்சள் நீராட்டு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை காலை,10:00 மணிக்கு மகா அபிஷேக ஆராதனை நடக்கிறது.