திருத்தணி: மலைக்கோவி திருத்தணி முருகன் லுக்கு, வரும் 12 மற்றும் 14ம் தேதிகளில் வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட் பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விழா நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற் பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வருவதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், நடந்து செல்லும் பக்தர்களும் கடும் சிரமப்படுகின்றனர். இதையடுத்து, கோவில் நிர்வாகம் சில மாதங் களாக முக்கிய அரசு விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஆட்டோ, வேன், பேருந்து ஆகிய வாகனங்கள் மலைப்பாதையில் செல்வதற்கு முற்றிலும் தடை விதித்து வருகிறது. மேலும், மலைக்கோவில் படாசெட்டிகுளம் அருகே இடவசதிக்கு ஏற்ப, பக்தர்களின் கார்கள் மட்டும் மலைப்பாதையில் செல்வதற்கு அனும திக்கப்படுகிறது. அந்த வகையில், வரும் 12 மற்றும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டில், 1,008 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு தரிசனம் என்பதால், லட்சக்க ணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வரு வர். இரு நாட்களும் பேருந்து, வேன், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு மலைப்பாதையில் செல்ல தடைவிதிக்கப்படுகிறது. அதேபோல், கார், இருசக்கர வாகனங்கள் மலைக்கோவிலில் இடவசதிக்கு ஏற்ப, மலைப்பாதையில் செல்வதற்கு அனுமதிக்கப் படும் என, கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார்.